செங்கல்பட்டில் மேலும் 169 பேருக்கு கொரோனா உறுதி.. அதிகரிக்கும் பாதிப்பு!

 

செங்கல்பட்டில் மேலும் 169 பேருக்கு கொரோனா உறுதி.. அதிகரிக்கும் பாதிப்பு!

தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. சென்னையை அடுத்து அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதனால் கடந்த 19 ஆம் தேதி முதல் கொரோனா அதிகமாகப் பரவியிருக்கும் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம், தேனி ரம் மதுரை 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. மேலும், தற்போது தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் மேலும் 169 பேருக்கு கொரோனா உறுதி.. அதிகரிக்கும் பாதிப்பு!

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நண்பகல் வரை மேலும் 169 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,308 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,313 ஆக உயர்ந்திருக்கிறது.