மதுரை: மாயமான கணவரை மீட்டுத்தரக் கோரி போலீசில் இளம்பெண் புகார்

 

மதுரை: மாயமான கணவரை மீட்டுத்தரக் கோரி போலீசில் இளம்பெண் புகார்

மதுரையில் கூலி வேலைக்கு சென்று மாயமான கணவரை மீட்டுத்தரக் கோரி, இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மதுரை: மாயமான கணவரை மீட்டுத்தரக் கோரி போலீசில் இளம்பெண் புகார்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் சாலை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சதீஷ்குமார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பாண்டி மீனா என்பருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், சதீஷ் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சதீஷ்குமார் வீடுதிரும்பாத நிலையில், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது மனைவி பாண்டிமீனா அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, மாயமான சதீஷை தேடி வருகின்றனர்.