தர்மபுரி: விலைவாசி உயர்வுக்கு எதிராக மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்
Nov 5, 2020, 18:34 IST1604581454000
தர்மபுரியில் விலைவாசி உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடந்த இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கிரைஸா மேரி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அப்போது, கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.