ஈரோடு: பவானியில் விவசாய தொழிலாளர் சங்க கிளை கூட்டம்

 

ஈரோடு: பவானியில் விவசாய தொழிலாளர் சங்க கிளை கூட்டம்

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சலங்கபாளையம் பேரூராட்சி, குருசான்வலசு காலனியில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க கிளை அமைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

ஈரோடு: பவானியில் விவசாய தொழிலாளர் சங்க கிளை கூட்டம்


பவானி பகுதி செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பெண்களுக்கு பொதுகழிப்பிட வசதி அமைக்கவும், கழிவுநீர் தேங்காத வகையில், சாக்கடை வசதி அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.