நீலகிரி: கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

 

நீலகிரி: கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல்வேறு இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி: கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

நீலகிரி மாவட்டத்தில் 12 நீர்மின் நிலையங்கள் உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், இதன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தனியாரிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க கோரியும் ஊட்டி மின்வாரிய அலுவலகம் முன்பும், குந்தா, கெத்தை, சிங்காரா, மாயார் ஆகிய மின் நிலையங்களின் முன்வும் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய பணிகள் பாதிக்கப்பட்டது.