வேலூர் மாவட்டத்தில் பதிதாக 166 பேருக்கு கொரோனா தொற்று!
Jul 6, 2020, 08:19 IST1594003774000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இதுவரை 166 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக பாதித்தவர்களையும் சேர்த்து வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 2,126 ஆக அதிகரித்துள்ளது.