அணியுமில்லை; பிணியுமில்லை – ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி

 

அணியுமில்லை; பிணியுமில்லை – ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி

இன்றைய அ.தி.மு.க.வுக்குள் பா.ஜ.க.அணி என்ற ஒன்று இருக்கிறது. அதில் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் போன்றவர்கள் முக்கிய ஆட்களாக செயல்பட்டு வருகிறார்கள் விருதுநகர் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். முழு சங்கியாகவே மாறிவிட்டார் ராஜேந்திரபாலாஜி என்றும் பேசியிருந்தார்.

அணியுமில்லை; பிணியுமில்லை – ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி

அவரது பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நாங்கள் சங்கி அல்ல. சங்கி என்று சொல்பவர்களுக்கு திஹார் ஜெயில் தயாராக உள்ளது.
கடவுள் பக்தியில் நாங்களும், பாஜகவும் ஒன்று என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் அமைச்சர் செல்லூராஜூவும் ஸ்டாலுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அணியுமில்லை; பிணியுமில்லை – ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி

அவர், ‘’அதிமுகவின் திட்டங்களில் எதிர்க்கட்சிகளால் குறை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அதிமுக அரசையும் அதிமுக அமைச்சர்களையும் வீணாக குறை கூறிக்கொண்டிருக்கிறார். அவர் சொல்கிற மாதிரி அதிமுகவில் எந்த அணியுமில்லை; பிணியுமில்லை’’என்று தெரிவித்திருக்கிறார்.