நீலகிரி: ஒற்றை காட்டுயானை தாக்கி பெண் உயிரிழப்பு

 

நீலகிரி: ஒற்றை காட்டுயானை தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒற்றை காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் கோக்கால் பகுதியை சேர்ந்தவர் கமலாட்சி (58). இவர் பக்கத்து வீட்டுபெண் பாத்திமா என்வருடன் நேற்று நீரோடைக்கு துணி துவைக்க சென்றுள்ளார். நகராட்சி குடிநீர் தேக்க தொட்டி அருகே சென்றபோது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டுயானை வந்துள்ளது.

நீலகிரி: ஒற்றை காட்டுயானை தாக்கி பெண் உயிரிழப்பு

அதனை கண்டு இருவரும் ஓட்டம்பிடித்த நிலையில், கமலாட்சியை யானை அடித்துககொன்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே காட்டுயானை தாக்கி உயிரிழந்த கமலாட்சி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.