திருவள்ளூர்: எண்ணூர் முகத்துவார பகுதியில் ஆட்சியர் பொன்னையா ஆய்வு

 

திருவள்ளூர்: எண்ணூர் முகத்துவார பகுதியில் ஆட்சியர் பொன்னையா ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் முகத்துவாரப்பகுதியில் நடைபெற்றும் வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, எண்ணூர் நெட்டுக்குப்பம் முகத்துவாரப் பகுதியில் மழைநீர் செல்ல ஏதுவாக அகலப்படுத்தும் மற்றும் ஆழப்படுத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர்: எண்ணூர் முகத்துவார பகுதியில் ஆட்சியர் பொன்னையா ஆய்வு

இதனை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் பொன்னையா, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது முதன்மை பொறியாளர் காந்திமதி நாதன், கண்காணிப்பு பொறியாளர் முத்தைய்யா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.