திண்டுக்கல்: தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு
Oct 31, 2020, 16:11 IST1604140870000
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) ராஜேஸ்வரி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.