அரியலூர்: மனைவியை கொன்ற நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
Oct 29, 2020, 20:22 IST1603983155000
அரியலூரில் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் இளம்பரிதி.இவர் குடும்ப தகராறில் தந்தை வீட்டில் வசித்து வந்த மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, தலையணையால் அவரது முகத்தில் அழுத்தி கொலை செய்தார்.
இதுதொடர்பாக இளம்பரிதியை கைதுசெய்த போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., சீனிவாசன் பரிந்துரையின் பேரில், இளம்பரிதியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார். இதனையடுத்து, இளம்பரிதி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.