கோவை: காந்திய சிந்தனைகளை பரப்பும், காங்கிரஸ் மக்கள் யாத்திரை

 

கோவை: காந்திய சிந்தனைகளை பரப்பும், காங்கிரஸ் மக்கள் யாத்திரை

கோவையில் பொதுமக்களிடையே காந்திய சிந்தனைகளை கொண்டு சேர்க்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் காந்திய மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: காந்திய சிந்தனைகளை பரப்பும், காங்கிரஸ் மக்கள் யாத்திரை

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கடந்த 18ஆம் தேதி துவங்கிய இந்த யாத்திரை, நாள்தோறும் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டுகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை: காந்திய சிந்தனைகளை பரப்பும், காங்கிரஸ் மக்கள் யாத்திரை

இதில், காந்திய சிந்தனைகளை பரப்பும் விதமாக பாடல்கள், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் 25-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட தெப்பகுளம் மைதானத்தில் இன்று நடைபெற்ற காந்திய மக்கள் யாத்திரையை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் துவக்கி வைத்தார்.

கோவை: காந்திய சிந்தனைகளை பரப்பும், காங்கிரஸ் மக்கள் யாத்திரை

இதில் மகாத்மா, பாரதியார் போன்ற தேசிய தலைவர்களின் வேடமணிந்தவர்கள் ஊர்வலமாக சென்று, காந்திய சிந்தனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.