மதுரை: பட்டாசு விற்பனை குறித்து அதிகாரிகள் ஆலோசனை

 

மதுரை: பட்டாசு விற்பனை குறித்து அதிகாரிகள் ஆலோசனை

மதுரையில் அனைத்து பட்டாசு விற்பனையாளர் சங்கம் சார்பில், தீபாவளி பட்டாசு விற்பனை செய்யும் இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட அலுவலர் கல்யாணகுமார் கலந்துகொண்டு, தீ பாதுகாப்பு மற்றும் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

மதுரை: பட்டாசு விற்பனை குறித்து அதிகாரிகள் ஆலோசனை

முன்னதாக, மதுரை மாவட்டம் சோளங்குருணி மற்றும் நல்லூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு நிறுவனங்களில், மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வுமேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பணியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.