ஊட்டி:ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

 

ஊட்டி:ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட அத்திக்குன்னா எஸ்டேட் 10-வது எண் பகுதியில் இன்று காலை சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.

ஊட்டி:ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

இதனை கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தையை ஆய்வுசெய்தனர். அதில், அந்த சிறுத்தை சுமார் 4 வயதுடைய ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. மேலும், சிறுத்தை எப்படி உயிரிழந்தது என்பது குறித்து, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.