நாகை: இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், தந்தை – மகன் உயிரிழப்பு

 

நாகை: இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், தந்தை – மகன் உயிரிழப்பு

நாகை அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகை அருகே மஞ்சக்கொல்லை அரசமரத்து தெருவை சேர்ந்தவர் முகமது சையதுஅலி (37). இவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் நாகூரில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக திரும்பியுள்ளார். அப்போது, நாகை செல்லூர் பிரிவு சாலை அருகே வந்தபோது, சாலையில் இருந்த வேகத்தடையை பார்த்து முகமது சையது அலி தனது வாகனத்தின் பிரேக்கை பிடித்துள்ளார்.

நாகை: இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், தந்தை – மகன் உயிரிழப்பு

அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், முகமது சையது அலி, அவரது மகன் ஜுப்லீ ரகமத்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காரை முற்றுகையிட்டு, கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் படுகாயமடைந்த சையது அலியின் மனைவி மற்றும் மற்றொரு மகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை: இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், தந்தை – மகன் உயிரிழப்பு