வீட்டில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவினர், சிறுமியின் தாயார் கைது!

 

வீட்டில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவினர்,  சிறுமியின் தாயார் கைது!

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரும், அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அச்சுக்கட்டு பகுதியை சேர்ந்தவர் கமர்ஜான் பேகம். இவரது 16 வயது மகள், உறவினர் அக்பர் அலி என்பவரது வீட்டில் தங்கி வேலை புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், அக்பர் அலி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி தனது தாயாரிடம் சென்று உள்ளார். இதனை அடுத்து, கமர்ஜான் பேகம் சிறுமியை திருச்சிக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவிக்கவே, மீண்டும் திருப்பத்தூரில் உள்ள அக்பர் அலியின் வீட்டிற்கு செல்லும்படி வற்புறுத்தி உள்ளார்.

வீட்டில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவினர்,  சிறுமியின் தாயார் கைது!

இதனால் வேறு வழியின்றி சிறுமி அங்கு சென்றபோது, அக்பர் அலி மீண்டும் பாலியல் தொல்லை அளித்து உள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவுக்கார பெண், திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவில் புகார் அளித்தார். அதன் பேரில், அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. தொடர்ந்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், அக்பர் அலி, சிறுமியின் தாயார் கமர்ஜான் பேகம் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த திருச்சியை சேர்ந்த இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.