16 வயது சிறுமியை 3 வருடமாக சீரழித்த 600 பேர்… உறவினர் உள்பட 5 பெண் முகவர்கள் கைது

 

16 வயது சிறுமியை 3 வருடமாக சீரழித்த 600 பேர்… உறவினர் உள்பட 5 பெண் முகவர்கள் கைது

மதுரை

மதுரையில் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி 600-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர் உள்பட 5 பெண் முகவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. பாலியல் தொழிலாளியான இவர், கடந்த 2015ஆம் ஆண்டு உறவினரான பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வளர்த்து வந்துள்ளார்.

16 வயது சிறுமியை 3 வருடமாக சீரழித்த 600 பேர்… உறவினர் உள்பட 5 பெண் முகவர்கள் கைது

13 வயதில் சிறுமி பூப்படைந்த நிலையில், அவரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். மேலும், ஜெயலட்சுமி, தனது தோழிகளான பாலியல் முகவர்கள் அனார்கலி, சுமதி, ஐஸ்சந்திரா, தங்கம், சரசி ஆகியோர் உதவியுடன், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் பாலியலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. பாலியல் தொழிலில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட இவர்களை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பலமுறை கைதுசெய்ய முயற்சித்தும், தப்பித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமியை மதுரை உத்தங்குடி அடுத்த விஐபிநகரில் உள்ள வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

16 வயது சிறுமியை 3 வருடமாக சீரழித்த 600 பேர்… உறவினர் உள்பட 5 பெண் முகவர்கள் கைது

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேம மாலா தலைமையிலான தனிப்படை போலீசார், சரவண பிரபு என்பவரின் வீட்டில் இருந்த சிறுமியை மீட்டனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் அதிரடியாக கைதுசெய்தனர். மேலும், சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளாக 600-க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. அவர்களின் விவரங்களை சேகரித்த தனிப்படை போலீசார், கைதுசெய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.