காதலனைப் பார்க்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

 

காதலனைப் பார்க்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு வீட்டிற்குச் செல்ல லிப்ட் கொடுக்கிறேன் என்று கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் .

சனிக்கிழமை மாலை சுபால் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சஹர்சாவிலிருந்து கால்நடையாக தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்தச் சிறுமி தனது காதலனை பார்க்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. திரும்பி வரும் வழியில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞன் சிறுமிக்கு லிப்ட் கொடுக்க முன்வந்தான். பின்னர் ஒரு இருட்டான இருட்டான இடத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர், இளைஞரின் மற்ற இரு நண்பர்களும் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.

காதலனைப் பார்க்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

இதனால் அந்த சிறுமிக்கு அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் அந்த இடத்திலிருந்து ஓடிவந்து ஒரு கிராம காவலரிடம் உதவி கோரினார். காவலர் பின்னர் பெண் காவல் நிலையத்தை அழைத்துச் சென்று சம்பவம் குறித்து தெரியப்படுத்தினார்.

சிறுமியின் புகாரின் பேரில் மூன்று இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களை தீவிரமாகத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
“தேவைப்பட்டால், சிறுமியின் காதலன் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்” என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.