ரயில் ஏற்றிவிடுவதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மர்ம கும்பல்!

 

ரயில் ஏற்றிவிடுவதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மர்ம கும்பல்!

16 வயதான இளம்பெண் மர்ம நபர்களால் போதை மருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் டில்லியில் அரங்கேறியுள்ளது.

வீட்டுவேலை செய்துவரும் அந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை மாலை வேலை பார்க்கும் வீட்டை விட்டு வெளியேறி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தை அடைந்திருக்கிறார். பின்னர் புது தில்லி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். அங்கு ஜார்கண்டிற்குப் போகும் ரயிலில் ஏற உதவுவதாக மூன்று நபர்கள் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

ரயில் ஏற்றிவிடுவதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மர்ம கும்பல்!

பின்னர் அந்த நபர்கள் அந்த பெண்ணை ரயில் நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று தெரியாத இடத்திற்கு கொண்டு சென்று மது அருந்துமாறு கட்டாயப்படுத்தியதோடு பாலியல் பலாத்காரமும் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் சில மணி நேரம் கழித்து அந்த கும்பல் பெண்ணை வழியில் விட்டுள்ளனர். சிறுமி சுய நினைவு இல்லாமல் இருப்பதைக் கண்ட போலீசாகாரர் ஒருவர் பெண்ணை மீது காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.