சென்னையில் கொரோனாவால் மேலும் 16 பேர் பலி.. தொடரும் உயிரிழப்புகள்!

 

சென்னையில் கொரோனாவால் மேலும் 16 பேர் பலி.. தொடரும் உயிரிழப்புகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனிடையே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மக்களின் மூலம் மற்ற மாநிலங்களில் கொரோனா பரவாமல் இருக்க, சென்னைவாசிகள் வேறு எங்கும் செல்ல முடியாத வண்ணம் கடும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனாவால் மேலும் 16 பேர் பலி.. தொடரும் உயிரிழப்புகள்!

அதிக அளவில் சென்னையில் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மேலும் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேரும் , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேரும் தனியார் மருத்துவமனையில் ஒருவரும், ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 10 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உயிரிழப்பு தொடருவது, சென்னைவாசிகளிடையே பீதியை அதிகரித்துள்ளது.