கோவை: கஞ்சா விற்பனை – கேரளாவை சேர்ந்த இருவர் கைது

 

கோவை: கஞ்சா விற்பனை – கேரளாவை சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் துடியலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர். துடியலூர் அடுத்த தடாகம் பகுதியில் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை: கஞ்சா விற்பனை – கேரளாவை சேர்ந்த இருவர் கைது

அப்போது, சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற கேரள பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை கண்ட தனிப்படை போலீசார், அங்கு நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கேரள மாநிலம் கோட்டத்துறையை சேர்ந்த பாண்டியன்(31) மற்றும் அரவிந்த்(19) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் சுமார் 2 கிலோ அளவிலான கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.