ஐயா ஆட்சியாளர்களே… ஆவேசமான கமல்

 

ஐயா ஆட்சியாளர்களே… ஆவேசமான கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ,
’’மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும். ’’என்றும்,

ஐயா ஆட்சியாளர்களே… ஆவேசமான கமல்

’’நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.
ஐயா ஆட்சியாளர்களே… தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல. ’’என்று பதிவிட்டிருக்கிறார்.

வழக்கம் போலவே, கமல்ஹாசனின் இந்த பதிவும் நேரடியாக இல்லாமல், போட்டு சுழற்றி அடிக்கிறது. அதனால், மக்களும் வழக்கம்போலவே, ஆண்டவரே, நீங்க யாரைச்சொல்லுறீங்க..என்ன சொல்லுறீங்க.. என்று கேட்டு வருகிறார்கள்.