திருச்சி: காவிரியில் புனிதநீர் எடுத்துவரப்பட்டு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்

 

திருச்சி: காவிரியில் புனிதநீர் எடுத்துவரப்பட்டு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், துலாம் மாத பிறப்பையொட்டி காவிரியிலிருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுத்துவரப்பட்டு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் இன்று துலாம் மாதம் துவங்குவதையொட்டி, கோவிலிலிருந்து தங்கக் குடம் எடுத்துவந்து, அம்மா மண்டபம் படித்துறையில் காவிரியிலிருந்து புனிதநீர், கோவில் யானை ஆண்டாள் மீது ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு நம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருச்சி: காவிரியில் புனிதநீர் எடுத்துவரப்பட்டு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்

புனிதமான காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் மற்றும் குடும்பத்தில் நன்மைகள் வந்துசேரும் என்பதால் அம்மா மண்டபம் படித்துறையில் திரண்ட ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். தண்ணீர்வரத்து அதிகமாக இருந்ததால் பக்தர்கள் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

திருச்சி: காவிரியில் புனிதநீர் எடுத்துவரப்பட்டு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்