தாவூத் இப்ராகிம் கூட்டாளியை சுற்றி வளைத்து பிடித்தது தமிழக போலீஸ்

 

தாவூத் இப்ராகிம் கூட்டாளியை சுற்றி வளைத்து பிடித்தது தமிழக போலீஸ்

இலங்கையில் மிகப் பெரிய ‘தாதா’வாக பேசப்பட்டு வந்தவர் சுனில் கெமினி பொன் சேகா ( எ) கொட்டா காமினி. போதைப் பொருள் விற்பனையில் மும்பை தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இவர் பல்வேறு கொலைச் சம்பவங்களில் தொடர்புடையவர்.


சர்வ தேச அளவில் மிகப் பெரிய போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய இவரை கடந்த 11 வருடங்களுக்கும் மேலாக இந்திய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தாவூத் இப்ராகிம் கூட்டாளியை சுற்றி வளைத்து பிடித்தது தமிழக போலீஸ்

இந்த நிலையில் கொட்டா காமினி. சென்னை அருகே புதுப்பாக்கம் என்ற பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
காஞ்சிபுரம் போலீசார் கொட்டா காமினியின் கைபேசி எண்ணை வைத்து அவரை நெருங்கி வந்ததை அடுத்து பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீசார் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு பெங்களூரில் கொட்டா காமினியை தேடி வந்தனர். இந்த நிலையில் தப்பிச்சென்ற கொட்டா காமினியை பெங்களூரில் வைத்து இரவு க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

–இர.சுபாஸ் சந்திர போஸ்