தர்மபுரி:கோரிக்கைகளை வலியுறுத்தி பெண் பஞ்சாயத்து தலைவர் தர்ணா

 

தர்மபுரி:கோரிக்கைகளை வலியுறுத்தி பெண் பஞ்சாயத்து தலைவர் தர்ணா

தர்மரி அருகே காலியாக உள்ள ஊராட்சி மன்ற செயலர் பணியிடத்தை உடனடியாக நிரப்பக் கோரி, பெண் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ளது முக்குளம் ஊராட்சி. இங்கு பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மோசடி நடந்தாக புகார் எழுந்தது. விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சில வாரங்களுக்கு முன்பு ஊராட்சி செயலர் சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், புதிய ஊராட்சி செயலரை நியமிக்கவும், மூடப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்தை உடனடியாக திறக்கவும் வலியுறுத்தி, நேற்று காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்மபுரி:கோரிக்கைகளை வலியுறுத்தி பெண் பஞ்சாயத்து தலைவர் தர்ணா

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பி.டி.ஓ தண்டபாணி, கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து, காஞ்சனா போராட்டத்தை கைவிட்டார்.