தஞ்சையில் கொரோனா பாதிப்பால் 15 வயது சிறுமி மரணம்!

 

தஞ்சையில் கொரோனா பாதிப்பால் 15 வயது சிறுமி மரணம்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 4,985 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த சென்னையில் தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது.

தஞ்சையில் கொரோனா பாதிப்பால் 15 வயது சிறுமி மரணம்!

தமிழகத்தில் விழுப்புரம், திருவாரூர், மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்னர், அம்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தினார். அதன் படி தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த கொடிய நோயான கொரோனா பாதிப்பால் சிறுவர், சிறுமிகளும், முதியவர்களும் அதிக அளவில் உயிழக்கின்றனர். இந்நிலையில், தஞ்சையில் கொரோனா பாதிப்பால் 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.