சென்னையில் கொரோனா தொற்றால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!

 

சென்னையில் கொரோனா தொற்றால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம் தான். அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,974 கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 அதிகரித்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் குறைந்த அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 38 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

சென்னையில் கொரோனா தொற்றால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாதொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த 15 சிறுவன் உயிரிழந்தார். கடந்த 12 ஆம் தேதி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், ஏற்கனவே மஸ்குலர் டிஸ்ட்ரப்பி என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.