“சோறு கொடுக்க போன பெண்ணை கூறு போட்டுட்டிங்களே” -“பட்ட பகலில் வெட்ட வெளியில் நடந்த கொடுமை

 

“சோறு கொடுக்க போன பெண்ணை கூறு போட்டுட்டிங்களே” -“பட்ட பகலில் வெட்ட வெளியில் நடந்த கொடுமை


தந்தைக்கு சாப்பாடு எடுத்து சென்ற ஒரு 15 வயதான பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொடுமை நடந்துள்ளது .

“சோறு கொடுக்க போன பெண்ணை கூறு போட்டுட்டிங்களே” -“பட்ட பகலில் வெட்ட வெளியில் நடந்த கொடுமை


உத்திரபிரதேச மாநிலம் சித்ரக்கூட்டில் ஒரு 15 வயதான சிறுமியொருவர் வயல் வெளியில் வேலை பார்க்கும் தன்னுடைய தந்தைக்கு தினமும் சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம் .அதன்படி அந்த பெண் கடந்த வாரம் வியாழக்கிழமை வயலில் வேலை செய்யும் தனது தந்தைக்கு ஒரு சாப்பாட்டு பாத்திரத்தில் சாப்பாடு எடுத்து சென்றார் .அப்போது அந்த பெண்ணோடு அவரின் உறவினரான 4 வயதான சிறுவனும் சென்றார் .
இதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார் .அதனால் அந்த வாலிபர் அந்த பெண்ணின் பின்னாடியே சென்று அவரின் வாயை துணியால் வைத்து அடைத்துள்ளார் .அப்போது அந்த பெண் கத்திய சத்தம் வெளியே யாருக்கும் கேட்கவில்லை .இந்த காட்சியை அந்த பெண்ணோடு வந்த 4 வயது சிறுவன் பார்த்து விட்டு கூச்சலிட்டு கத்தினான் .உடனே அந்த வாலிபர் அந்த சிறுவனை அடித்து மயக்கமுர செய்தார் .அதன் பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணை அந்த வயல் வெளியில் பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு அந்த பெண் உயிரோடிருந்தால் தன்னை காட்டி கொடுத்துவிடுவார் என்று அந்த வாலிபர் பயந்தார் .அதனால் அங்கிருந்த ஒரு விறகு வெட்டும் கோடரியை எடுத்தார் .அதன் பிறகு அந்த பெண்ணை அந்த கோடாரி கொண்டு கடுமையாக தாக்கி கொலை செய்தார் .அதன் பிறகு அந்த பிணத்தை அந்த வயல் வெளியில் வீசி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார் .அதன் பிறகு அந்த சிறுமியின் பிணம் அங்கு கிடப்பதை பார்த்த அந்த ஊர் மக்கள் சிலர் அந்த பெண்ணின் தந்தையிடம் கூறினார்கள் .அவர் அந்த மகளின் பிணத்தை கண்டு திடுக்கிட்டு போலீசில் புகார் கூறினார் .போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று ஆராய்ந்து வருகிறார்கள் .இந்த தாக்குதலில் காயமடைந்த அந்த சிறுவனும் இந்த தாக்குதலில் இறந்தான் என்று போலீசார் கூறினார்கள்.

“சோறு கொடுக்க போன பெண்ணை கூறு போட்டுட்டிங்களே” -“பட்ட பகலில் வெட்ட வெளியில் நடந்த கொடுமை