குளத்தில் மீன்பிடித்த சிறுவன், நீரில் மூழ்கி பலி!

 

குளத்தில் மீன்பிடித்த சிறுவன், நீரில் மூழ்கி பலி!

தென்காசி

தென்காசி அருகே குளத்தில் மீன்பிடித்தபோது, நீரில் தவறி விழுந்து, 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ஐய்யப்பன். இவரது மகன் சக்திவேல் (10). பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த சக்திவேல், தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தார். சம்பவத்தன்று இரவு உறவினர்களுடன், அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்றார்.

குளத்தில் மீன்பிடித்த சிறுவன், நீரில் மூழ்கி பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி சேற்றில் விழுந்த சக்திவேல், நீரில் மூழ்கினார். இதுகுறித்து உடனிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சுரண்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின்னர் அவர்கள் சிறுவனை சடலமாக மீட்டனர்.

தொடர்ந்து, சாம்பார் வடகரை போலீசார் சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.