மதுரையில் 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

 

மதுரையில் 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

மதுரை

மதுரையில் 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். கூலி தொழிலாளி. இவரது மகன் பெரியசாமி (15). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா விடுமுறை காரணமாக பெரியசாமி வீட்டில் இருந்து வந்தார்.

மதுரையில் 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் பெரியசாமியை மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து, தந்தை லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.