தங்கபாலு, பாலகிருஷ்ணன் இருவரும் விரைவில் நலம் பெற விழைகிறேன்- ஸ்டாலின்!

 

தங்கபாலு, பாலகிருஷ்ணன் இருவரும்  விரைவில் நலம் பெற  விழைகிறேன்- ஸ்டாலின்!

தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்கபாலு, பாலகிருஷ்ணன் இருவரும்  விரைவில் நலம் பெற  விழைகிறேன்- ஸ்டாலின்!

இந்நிலையில் இவ்விருவரையும் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

’’காங்கிரஸ் மூத்த தலைவர் நண்பர் கே.வி.தங்கபாலு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதையும், சிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதையும் அறிந்தேன். இருவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.
இருவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன்!