பட்டு வேட்டியில் நடிகர் சிம்பு! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்!

 

பட்டு வேட்டியில் நடிகர் சிம்பு! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்!

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று நடிகர் சிம்பு சாமி தரிசனம் செய்தார். பட்டு வேட்டி அணிந்து, மேல் சட்டை அணியாமல் பட்டு துண்டைபோர்த்தி சாமி தரிசனம் செய்தார்.

ரசிகர்களால் இடையூறு ஏற்படும் என்று முகம் முழுவதும் தெரியாத வண்ணம் மாஸ்க் அணிந்திருந்தார்.

பட்டு வேட்டியில் நடிகர் சிம்பு! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்!

கோவிலை விட்டு செல்லும்போது பேண்ட் – சர்ட் அணிந்து, முகம் முழுவதும் தெரியாத வண்ணம் மாஸ்க் அணிந்து, தலையில் தொப்பியும் அணிந்திருந்தார். அப்படி இருந்தும், உடன் போலீஸ் வந்ததால், சிம்பு என்பதை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அவரை பார்க்க முண்டியடித்தனர்.

சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று, வேலூர் அடுத்த ரத்தினகிரி மலைப்படிகளில் மண்டியிட்டபடியே ஏறிச்சென்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்திருந்தனர். இந்நிலையில், சிம்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றதும், திருமணத்திற்கான பிரார்த்தனை என்றே அவரது ரசிகர்கள் சொல்கிறார்கள்.