144 தடையிலும் நடந்த மஞ்சுவிரட்டு..படுகாயம் அடைந்த காவலர்!
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 144 தடையும் போடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 144 தடையும் போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தடையை மீறி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்கோட்டை கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டுள்ளது. இதனை அறிந்த போலீசார், உடனே மஞ்சுவிரட்டு நடந்து கொண்டிருந்த இடத்துக்கு சென்றுள்ளனர். போலீசாரை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர்.
இதனால் மிரண்டு போன காளை ஒன்று கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடி வந்து ஏற்று கனகராஜை குத்தியுள்ளது. அதில் படுகாயம் அடைந்த அவரை, உடனே போலீசார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.