புதிர் போட்டியில் புறக்கணிக்கப்படும் தமிழ்! மத்திய அரசுக்கு கனிமொழி கடும் கண்டனம்

 

புதிர் போட்டியில் புறக்கணிக்கப்படும் தமிழ்! மத்திய அரசுக்கு கனிமொழி கடும் கண்டனம்

புதிர் போட்டியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்காக, மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கனிமொழி எம்.பி.

புதிர் போட்டியில் புறக்கணிக்கப்படும் தமிழ்! மத்திய அரசுக்கு கனிமொழி கடும் கண்டனம்

மகாத்மா காந்தியடிகளின் 152ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் இணையவழி புதிர் போட்டியில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மற்றுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ‘’தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் நடத்தும் ஒரு புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குறியது’’என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’தமிழோ,ஆங்கிலமோ தெரியாமல் தாய்மொழி மட்டுமே அறிந்த குழந்தைகள் ஏராளமானோர் இருப்பதால், இப்போட்டி அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்’’என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.