பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தகராறு.. 10 பெண்கள் படுகாயம்; சிறையில் 14 இளைஞர்கள்!

 

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தகராறு.. 10 பெண்கள் படுகாயம்; சிறையில் 14 இளைஞர்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கில் பல வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலும் நடந்த சண்டையால் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தகராறு.. 10 பெண்கள் படுகாயம்; சிறையில் 14 இளைஞர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் விஜய்(25) தனது பிறந்தநாளை உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். அப்போது அவர்கள் அனைவரும் சத்தம் போட்டதால், அந்த தெருவில் வசிக்கும் சிவராஜ்(30) சத்தம் போட கூடாது என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் சிவராஜுக்கும் விஜய்யின் நண்பர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சண்டையை தடுக்க முயன்ற 10 பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தகராறு.. 10 பெண்கள் படுகாயம்; சிறையில் 14 இளைஞர்கள்!

தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்த பெண்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சண்டையில் ஈடுபட்ட 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.