14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

 

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

ஈரோடு

ஈரோட்டில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் ஆறுமுகம்(26). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர், ஈரோட்டில் 10ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை, கடந்த 19ஆம் தேதி ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின் பேரில் அவரது பெற்றோர், ஈரோடு தெற்கு காவல்நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து, ஆறுமுகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.