தமிழகத்தில் 14 நாட்கள் முழு முடக்கம்?

 

தமிழகத்தில் 14 நாட்கள் முழு முடக்கம்?

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு லட்சமாக பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு இன்று 2 லட்சத்தை எட்டியது. கொரோனா மரணங்களும் ஆயிரத்தை கடந்து விட்டன. இரண்டாம் அலை அசுர வேகத்தில் பரவிவரும் சூழலில், பாதிப்பை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை கையெலுத்துள்ளன. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 நாட்கள் முழு முடக்கம்?

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கிவருகிறாது. இதனையடுத்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளருடன் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. இதனிடையே தமிழகத்திலும் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு பொதுமுடக்கம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.