14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையும், சித்தப்பாவும் கைது: நடந்தது என்ன?

 

14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையும், சித்தப்பாவும் கைது: நடந்தது என்ன?

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரின் தந்தையையும், சித்தப்பாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்

கோவை: 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரின் தந்தையையும், சித்தப்பாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நாட்டில் பெருகி வரும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் தொந்தரவுகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பாராத பெண்களே இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு பாலியல் ரீதியான வழக்குகளும், குற்றச்செயல்களும் தினந்தோறும் நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

மாணவர்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில் தெலுங்குபாளையத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில், கெட்ட நோக்கத்துடன் தொடுதல் என்ற தலைப்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 14 வயது சிறுமி ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது தந்தையும், இரண்டு சித்தப்பாவும் தனக்கு பாலியல் ரீதியான வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி தகவலை மாவட்ட குழந்தைகள் மைய அதிகாரிகளிடம் விளக்கியுள்ளார். 

இதையடுத்து, சிறுமியின் புகாரை அடிப்படையாக வைத்து வழக்குப் பதிவு செய்த செல்வபுரம் போலீசார், சிறுமியின் தந்தையையும் அவரது ஒரு சித்தப்பாவையும் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு சித்தப்பாவை வலைவீசி தேடி வருகின்றனர்.