வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

 

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவம் 25ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். இதனையொட்டி தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருவார்.

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

பெருமாள் கோவில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தவையாகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர்.

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால், நவராத்திரி உற்சவத்தின் 7ம் திருநாளான இன்று மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைகிறார். மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

பின்னர் இரவு 8 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.