‘’நீங்களுமா…?’’வியாபாரிகள் வயிற்றில் கரைக்கும் புதிய புளி!

 

‘’நீங்களுமா…?’’வியாபாரிகள் வயிற்றில் கரைக்கும் புதிய புளி!

அரசியல் தலைவர்களுக்கு நல்லது, கெட்டது என்றால் ஊரில் உள்ள வியாபாரிகளின் வயிற்றில் புளியை கரைத்தது போலாகிவிடுகிறது. ’தலைவருக்கு விசேஷம்’ என்று சொல்லி, ஆளாளுக்கு வசூல் வேட்டையில் இறங்கிவிடுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

‘’ஒங்க தலைவருக்கு கட்-அவுட், பேனர் வைக்கிறதுக்கும், போஸ்டர் அடிக்குறதுக்கும் நான் எதுக்குடா பணம் கொடுக்கணும்’’என்று உள்ளுக்குள் கனன்று எரிந்தாலும், அதன் மேல் ஒரு ஈரத்துணியை போட்டுவிட்டு, வியாபாரம் தங்குதடையின்றி நடக்க கல்லாவில் இருந்து எடுத்து கப்பம் கட்டிவிடுகிறார்கள்.

‘’நீங்களுமா…?’’வியாபாரிகள் வயிற்றில் கரைக்கும் புதிய புளி!

இருக்கிற கட்சிகளுக்கே இப்படி அழுதுவடிக்கும் நிலையில் புதிதாக ஒரு கட்சியும் வசூலில், அதுவும் கறார் வசூலில் இறங்கி இருப்பதால் கலங்கிப்போயிருக்கிறார்கள் வியாபாரிகள். இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கோவை வியாபாரிகள்தான்.

கடந்த வாரத்தில், கொடுத்ததை வாங்கிக்கொள்ளாமல், ’’இவ்வளவு கொடுக்கணும்’’ என்று வசூல் வேட்டையாடியபோது, கொஞ்சம் யோசித்த வியாபாரிகளிடத்தில், ‘அடுத்து எங்க ஆட்சிதான்…அப்புறம் பார்த்துக்கோ’என்று மிரட்டி இருக்கிறார்கள் வசூல் சக்கரவர்த்திகள்.

கோவை முழுவதும் இப்படி அடாவடியாக வசூலில் இறங்கவே, ’’நீங்களுமா…?’’என்று புலம்பித்தவிக்கிறார்கள்.

-கே