மதிமுக பிரமுகர் வெட்டி கொலை! விருதுநகரில் பதற்றம்!

 

மதிமுக பிரமுகர் வெட்டி கொலை! விருதுநகரில் பதற்றம்!

மதிமுகவின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் வசித்து வந்தவர் சிவா என்கிற சிவக்குமார் (51). இவர் மதிமுகவில் முன்னாள் பொதுகுழு உறுப்பினர். இவர் வீட்டிற்கு எதிரே குடியிருந்து வருபவர் மாரிமுத்து( 28).

மரம் வெட்டும் வேலை செய்து வரும் இவர், தினமும் மது போதையில் குடியிருக்கும் தெருவில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் 10.00 மணியளவில் சிவக்குமார் வீட்டிற்கு முன்பு போதையில் இருந்த மாரிமுத்து, தன்னுடன் இருத்தவர்களை சத்தம் போட்டபடியே இருந்துள்ளார்.

மதிமுக பிரமுகர் வெட்டி கொலை! விருதுநகரில் பதற்றம்!

இந்நிலையில், சிவக்குமார் இரவு 10.45 மணிக்கு கடைக்கு சென்று விட்டு தெரு வழியாக தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த மாரிமுத்து தான் மறைத்து எடுத்து வந்த அரிவாளால் சிவக்குமாரின் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். அதில் கீழே விழுந்த சிவக்குமாரின் உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சிவக்குமார் உயிரிழந்தது தெரியவந்ததும் மாரிமுத்து தப்பியோடிவிட்டார்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர், சிவக்குமாரின் உடலை கைபற்றி சாத்தூர் அரசு மருத்துமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர், கொலையாளி மாரிமுத்துவை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் வெங்கடாசலபுரத்தில்சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தப்பியோடிய மாரிமுத்து காட்டு பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்ததும், போலீசார் விரைந்து மாரிமுத்துவை காவல் துறையினர் கைது செய்ததை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிடப்பட்டது.