அம்மா மண்டபத்தில் அனுமதி ரத்து!காவிரிக் கரையோரங்களில் தர்ப்பணம்

 

அம்மா மண்டபத்தில் அனுமதி ரத்து!காவிரிக் கரையோரங்களில் தர்ப்பணம்

மஹாளய அமாவாசை திதி கொடுக்க பொதுமக்களுக்கு அம்மா மண்டபத்தில் அனுமதியில்லாத காரணத்தினால் காவிரிக் கரையோரங்களில் திதி கொடுத்தார்கள்.

அம்மா மண்டபத்தில் அனுமதி ரத்து!காவிரிக் கரையோரங்களில் தர்ப்பணம்
அம்மா மண்டபத்தில் அனுமதி ரத்து!காவிரிக் கரையோரங்களில் தர்ப்பணம்

வருடம் தோறும் வரும் அமாவாசைகளில் தை, ஆடி புரட்டாசி வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசை ஆகும். இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, காவிரிக் கரையோரங்களில் தர்ப்பணம் கொடுத்து வருவார்கள்.

அம்மா மண்டபத்தில் அனுமதி ரத்து!காவிரிக் கரையோரங்களில் தர்ப்பணம்

ஆனால், கொரோனா பரவல் காரணமாக அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க அனுமதிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு சிலர் நேற்றே அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் கொடுத்து சென்றனர். இன்று சத்திரம் பேருந்து நிலையம் அடுத்து கம்பரசம்பேட்டை அருகே காவிரி கரையோரத்தில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். இதேபோல் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு செல்கின்றனர்.