“130 உணவு பொட்டலங்களை மாமூலாக கேட்டு மிரட்டிய திமுக கிளைச் செயலாளர்” : ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த நடிகை கஸ்தூரி

 

“130 உணவு பொட்டலங்களை மாமூலாக கேட்டு மிரட்டிய திமுக கிளைச் செயலாளர்” : ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த நடிகை கஸ்தூரி

திருப்பூர் அவிநாசி அருகே பெருமாநல்லூர் உட்பட்ட பகுதிகளுக்கு சேவா பாரதி சங்கம் சார்பாக அங்குள்ள அங்காளம்மன்  கோயிலில் வைத்து உணவு சமைத்து 300 பேருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.

திருப்பூர் அவிநாசி அருகே பெருமாநல்லூர் உட்பட்ட பகுதிகளுக்கு சேவா பாரதி சங்கம் சார்பாக அங்குள்ள அங்காளம்மன்  கோயிலில் வைத்து உணவு சமைத்து 300 பேருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.  இதை  பெருமாநல்லூர் பஞ்சாயத்து துணைத் தலைவரும், அப்பகுதியின் திமுக கிளைச் செயலாளருமான வேலுச்சாமி, எனக்கு இதில் 130 பொட்டலங்கள் வேண்டும்.

avinashi

அப்படி இல்லையென்றால்  இங்கு உணவு சமைத்து வழங்க முடியாது என்று மிரட்டி தினமும் 130 பொட்டலங்கள் வாங்கி அதை தனது பெயரில் மற்றவர்களுக்கு கொடுத்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kasthuri tweet screenshot

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி, “ஏழைகளுக்கு உணவு வழங்க தினமும் 130 உணவு பொட்டலங்களை மாமூலாக கேட்டு மிரட்டிய திமுக கிளைச் செயலாளர்!” – செய்தி  
தலைவர் ரேஞ்சுக்கு கோடி ருபாய் கொடுக்க சொல்வாரு. இவரு லெவெலுக்கு இவரு 100 சோத்து பொட்டலம் கேட்டுருக்காரு. அது  குத்தமா  ?” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.