13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

நாகை

நாகை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு வடித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஞானவேல் என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. அவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஞானவேல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனை அடுத்து, மகளிர் போலீசார், ஞானவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பாட்டார்.