13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தாயின் 2-வது கணவர் கைது!

 

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தாயின் 2-வது கணவர் கைது!

கோவை

கோவை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற தாயின் 2-வது கணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், கணவரை பிரிந்து 13 வயது மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளி சுந்தரசாமி என்பவரை 2-வது திருமணம் கொண்டுள்ளார். தொடர்ந்து, அங்குள்ள தோட்டத்து வீட்டில் மூவரும் வசித்து வந்துள்ளனர்.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தாயின் 2-வது கணவர் கைது!

சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த புதன் கிழமை மாலை சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, தந்தை சுந்தரசாமி, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், 2-வது கணவர் சுந்தரசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், மகளிர் போலீசார் சுந்தரசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மகளுக்கு, தாயின் 2-வது கணவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தொண்டாமுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.