கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி!

 

கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி!

ராஜஸ்தானுக்கு கடத்தப்பட இருந்த 13 வயது சிறுமி ஒருவர் மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் வைத்து ஐந்து நபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஜெய்ப்பூரிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இந்த குற்றம் தொடர்பாக சிறுமியின் பெண் நண்பர் மற்றும் இரண்டு சிறுமிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தேவாஸில் தனது அத்தை வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்த மகளைக் காணவில்லை என்று சிறுமியின் தந்தை ஜூன் 16-ம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.

கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி!

ஜூன் 15 அன்று தேவாஸ் ரயில் நிலையத்தில் இருந்து சிறுமியைக் கடத்தியவர்களுக்கு உதவி செய்ததற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சிறுமி தனது இரு சக்கர வாகனத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு ரோஹித் காதிக் (23), அஜய் காதிக் (20), விஷால் கோஸ்வாமி என்ற மூவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த சிறுமி ராஜஸ்தானுக்கு கடத்தப்பட இருந்ததாகவும் போலீஸ் தெரிவித்தனர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.