சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர் பணியிட மாற்றம்!

 

சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர் பணியிட மாற்றம்!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதி சூர்யா நகரை சேர்ந்த மணிகண்டன் – பிரதிக்ஷா தம்பதியின் மகன் யுவன். 13 வயதான இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக நண்பர் வீட்டுக்கு சென்று உள்ளார்.

சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர் பணியிட மாற்றம்!

அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலர் துர்கா ராஜ் முழு ஊரடங்கு காலத்தில் வெளியில் வரக்கூடாது என்று அறிவுரை கூறுவதற்கு பதிலாக தனது லத்தியால் சிறுவனை சரமாரியாக அடித்து உள்ளார். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர் பணியிட மாற்றம்!

இந்நிலையில் கோவை ஒண்டிப்புதூரில் சோதனையின்போது 13 வயது சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர் துர்கா ராஜ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.