சென்னையில் 1000-ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு : இன்று ஒரே நாளில் 13 பேர் பலி!

 

சென்னையில் 1000-ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு :  இன்று ஒரே நாளில் 13 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,329 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 1000-ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு :  இன்று ஒரே நாளில் 13 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 64,689 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1000-ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு :  இன்று ஒரே நாளில் 13 பேர் பலி!

இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,009ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை கொரோனாக்கு 996 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 13 பேர் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது.