சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 13 பேர் உயிரிழப்பு!

 

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 13 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவிய உடன், வியாபாரிகள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள், பொதுமக்கள் என பலருக்கும் கொரோனா அதிவேகமாக பரவியது. இதனை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நிர்வாகம் எடுத்துக் கொண்டே இருப்பினும் உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 13 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 6 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவர் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது சோதனை முடிவுகள் வந்தால் தான் அவர் கொரோனாவால் உயிரிழந்தாரா என்பது தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.