13 மாவட்டங்கள் உட்பட, சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை! 

 

13 மாவட்டங்கள் உட்பட, சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை! 

திடீரென்று ஒரே இரவில் சென்னையில் பெய்த கனமழை, இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெய்த அதிகளவிலான மழையாக பதிவாகியிருக்கிறது. இன்று சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை இருந்தாலும்,

திடீரென்று ஒரே இரவில் சென்னையில் பெய்த கனமழை, இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெய்த அதிகளவிலான மழையாக பதிவாகியிருக்கிறது. இன்று சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை இருந்தாலும், வானம் ஓரளவிற்கு மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

rain

இந்நிலையில், வளிமண்டலத்தில் உருவாகியிருக்கும்  மேலடுக்கு சுழற்சியின்  காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்:
சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.